தூத்துக்குடி மாவட்டம்கழுகுமலை மற்றும் வானரமுட்டி நியாயவிலை கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் வழங்கும் விழா 06.01.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலைகள் பயனாளிகளுக்கு வழங்கி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடும் ஒரே விழா பொங்கல் விழாவாகும் ஏழை எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை இனிமையாக பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாயாக இருந்து தமிழக மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை கொண்டுவந்தார்கள் பொங்கல் பரிசு தொகுப்பு டன் ரூ 100 ரொக்கமும் வழங்கினார்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த உடன் அவர்கள் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இனி தொடர்ந்து செயல்படாது என ஒரு சிலர் கூறிவந்தனர் மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்திய துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் வழங்கி ரூபாய் 1000 வழங்கிடவும் உத்தரவிட்டார்கள் அதன் அடிப்படையில் நாடு முழுவதும் அரிசி பெரும் 2 கோடியே 63 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுகிறது இத்திட்டம் சுமார் 2 கோடியே 363கோடிசெலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த வழங்கும் பணிகளை தொடங்கப்பட்டுள்ளது மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது பொங்கல் பண்டிகையை அனைவரும் பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாட வேண்டுமென மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுதனது உரையில் குறிப்பிட்டிருந்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக