



தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் செட்டிகுறிச்சி ஊராட்சி தெற்கு கோனார் கோட்டை புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ராஜகாளி அம்மன் ஸ்ரீ சங்கிலி பூதத்தார் திருக்கோவில் ஆறாம் ஆண்டு பூக்குழி கொடை விழா கடந்த 10- 2020 முதல் 12- 2 -2020 வரை திங்கள் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது இந்த கொடை விழாவில் யாகசாலை பூஜை- புனித தீர்த்தம் எடுத்து வருதல் பால்குடம் எடுத்து வருதல் - வடக்கத்தி அம்மன் அனுப்புதல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது, செட்டிகுறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் திரு எம் தலைவர் அவர்கள் அன்னதானத்தை துவக்கி வைப்பு , மாவிளக்கு எடுத்து வருதல், வில்லிசை கச்சேரி மற்றும் அலங்கார பூஜை, இதனைத்தொடர்ந்து இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சாம கோடையில் பக்தர்கள் பயபக்தியோடு பூக்குழி இறங்கினார்கள் - இந்த கொடை விழாவிற்கு தெற்கு கோனார் கோட்டைெ கிரா ம், செட்டிகுறிச்சி கிராம அனைத்து மக்களும், .சுற்றுப்புற கிராம மக்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர் இந்தக்கோவில்கொடைவிழாவுக்கான ஏற்பாடுகளை ... புதூர், கருணை தரும் ஸ்ரீ காளியம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் -தலைவர், SP. முத்துப்பாண்டி மற்றும் அதன் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். சாமக்கொடை முடிந்த பின், பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல வாகன வசதியும் , பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக