முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

தூத்துக்குடி 2020 மார்ச் 6 ; தூத்துக்குடி ரோட்டரி சங்கம் ரோட்டரி இன்டர்நேஷனல் ப்ராஜெக்ட் பாசிடிவ் ஹெல்த் திட்டத்தின் கீழ், தூத்துக்குடியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் மனிதச்சங்கிலி மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இம்மனிதச்சங்கிலியில் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை நர்ஸிங் கல்லூரி மாணவிகளும், புனித மரியன்னை கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, ஸ்ட்ரோக் மாரடைப்பு மற்றும் உடல் பருமன் பற்றிய பதாகைகளைக் கையில் வைத்துக் கொண்டு மாணவியர்கள் கைகோர்த்து நின்றார்கள்.  தொற்றா நோய்கள் பற்றிய கோஷங்களையும் மாணவியர் எழுப்பினர்.
மாணவியரோடு ரோட்டரி மாவட்டத்தின் முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார், ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றம் முன்னாள் தலைவி உஷா கணேசன்;, சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் அருள்ராஜ் (முன்னாள் அகில இந்திய மருத்துவக் கழகத் தலைவர் மற்றும் முன்னாள் காமன் வெல்த் நாடுகளின் மருத்துவ சங்கத் தலைவர்) நீரழிவு நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர். ஆர்த்தி கண்ணன் மற்றும் அருள்ராஜ் மருத்துவமனை நர்சிங் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட மாணவியருக்கு தேங்காய் பன், வெஜிடபில் பப்ஸ் மற்றும் டீ ஆகியவை ரோட்டரி சங்கத்தின் மூலமாக வழங்கப்பட்டது.
 பின்னர் மருத்துவமனையின் ஆடிட்டோரியத்தில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் முன்னாள் ரோட்டரி ஆளுநர் டாக்டர் விஜயகுமார், டாக்டர். அருள்ராஜ், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பாலசேகர் ஆகியோர் தொற்றா நோய்கள் குறித்துப் பேசினர்.
ரோட்டரி சங்கத்தின் சார்பில், கோரோனா வைரஸ் மற்றும் அதைத் தடுக்கும் முறைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் டாக்டர் விஜயகுமார் அவர்களால் வெளியிடப்பட்டது.  அதன் முதல் பிரதியை டாக்டர் அருள்ராஜ்  பெற்றுக் கொண்டார்.  இந்தப் பிரசுரங்கள் அனைத்தும் தூத்துக்குடி நகரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.
பேரணி மற்றும் விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ், செயலாளர் ஆனந்த் கணேஷ், பொருளாளர் டேவிட் ராஜா மற்றும் முன்னாள் தலைவி உஷா கணேசன் ஆகியோர் சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையோட்டு இணைந்து செய்திருந்தனர்.தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்