தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.


தமிழ்நாடு  போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா.

கடலூர் .மார்ச் .11. கடலூர் நகர அரங்கத்தில் தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட தொழிற்சங்க தொடக்கவிழா நல வாரியத்தில் உறுப்பினர்களை இணைக்கும் விழா அடையாள அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு மாநில செயலாளர் கபாலீஸ்வரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ரமேஷ், பொருளாளர் சரவணன், துணை தலைவர்கள் திருநெல்வேலி சங்கர், திருவண்ணாமலை வீரபாகு, இணைச் செயலாளர்கள் தூத்துக்குடி செந்தில்குமார், கோவை ஜேம்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளராக ரமேஷ் செயல்பட்டார். கடலூர் மாவட்ட தலைவராக உமாபதி, செயலாளராக கல்யாண முருகன் பொருளாளராக சரவணன், இணைச் செயலாளர்கள் அறிவு, குமாரசாமி ,பாலமுருகன்,
துணைத்தலைவராக மகேஷ்குமார் சுப்பிரமணியன், சிவசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், சக்திவேல், பாலு, பரமசிவம், பொன்னியின் செல்வன், ரமேஷ், மணிகண்டன் வடிவேல் ரமேஷ் மனோகர், சஞ்சீவிகுமார், வடிவேல், விஜயகுமார், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த முப்பெரும் விழாவில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. உறுப்பினர்களை நலவாரியத்தில் சேர்க்க தீர்மானிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் எடுக்கப்பட்டது.

கருத்துகள்