சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் பற்றிய தகவல் தருமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்

 4 - 5 - 2020 சென்னைகோயம்பேடுபகுதியில்இருந்து தூத்துக்குடிமாவட்டத்திற்கு வந்தவர்கள் 
உடனடியாக தங்களது விபரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்களை பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியபடுத்லாம்  தூத்துக்குடி மாவட்ட  ஆட்சித் தலைவர்  திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் 
-------------------------------------------------------------------
-------------------------------------------------------- 
 தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்னசிறப்பாகமேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 
அனைவரும் குணமான நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து 
வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 
வரும் அனைத்து சாலை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறை, சுகாதார துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி அமர்த்தப்பட்டு 
கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம் மற்றும் வெளி 
மாநிலங்களில் வரும் அனைவருக்கும் மருத்துவபரிசோதனைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென சோதனை சாவடி பகுதியில் தனிமைப்படுத்த தேவையான இடங்கள்தயார் நிலையில் உள்ளது. 
       தற்போது சென்னை மாவட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் வருவது அதிகரித்து உள்ளது. சென்னையில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு வீட்டில் 14 நாட்கள் தனிமைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்கள் தங்களது விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட கட்டுபாட்டு அறை தொலைபேசி எண் 0461-2340101, 2340214, 2340307, 2340314, 2340378 மற்றும் 9486454714 என்ற அலைபேசி எண்ணிலும்உடனடியாகதகவல்தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும், கோயம்பேடு பகுதியில் இருந்து வருகை தந்தவர்கள் தங்கள் பகுதியில் இருப்பின் பொதுமக்களும் மாவட்டநிர்வாகத்திற்கு மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளர் 

கருத்துகள்