கொரேனோ வைரஸ் நோய் தொற்று உலகெங்கும் பரவி மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்து வருவதோடு மக்களின் மனதில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் நமது நாட்டு மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது ஏழை எளிய மக்கள் அன்றாட பிழைப்புக்கும் உணவுக்கும் விழிபிதுங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில் ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட மகத்தான மனிதர்களின் உதவும் கரங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்துவருகிறது
தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அதன் மாவட்ட செயலாளர் A J ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி மன்ற காவலர்கள் P. ராமமூர்த்தி மற்றும் S. முருகன் இவர்களின் ஏற்பாட்டில் தூத்துக்குடி நகரின் அண்ணா நகர் பகுதியில் இயங்கி வரும் தங்கம் நடுநிலைப் பள்ளியின் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரும் ஏழை ,எளிய மாணவ, மாணவியர்களின் குடும்பத்திற்கு அரிசி,காய்கறி ,தொகுப்பு மாஸ்க், மற்றும் - கபசுர குடிநீர் இவையாவும் சமூக இடைவெளியை கடைபிடித்து வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் P.K தீர வாசகம் -.மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் M. விஜய் ஆனந்த் - மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செந்தில் ஆறுமுகம் - நகர செயலாளர் P. துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் குடும்பங்கள் பயன் பெற்றன
கருத்துகள்
கருத்துரையிடுக