தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதுவும் தொடர்ந்து கொரோணா தொற்று கண்காணிப்பு மற்றும் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதுவும் தொடர்ந்து கொரோணா தொற்று கண்காணிப்பு மற்றும் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டாம்புளி மற்றும்
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் ஆகிய கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள்  10.06.2020) அன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளி வருவதையும், வெளியே இருந்து பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லாமல் இருக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்எ னவும்என அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செய்துங்கநல்லூர் நியாயவிலைக்கடை யில்பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை  பார்வையிட்டு, பொதுமக்கள் முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.                                                                     பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு  . சந்தீப்நந்தூரி ,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் சமூக பரவால் ஏற்படாத
வகையில்தடுப்புபணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி கிடைத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும்,கொரோனாதொற்றுஅறிகுறிகள் உள்ளநபர்களின்முதன்மைதொடர்பாளர்கள் மற்றும் இரண்டாம் தொடர்பாளர்கள் எனஎந்தஒருநபரும்விடுபடாதவகையில்அனைவருக்கும்கொரோனாதொற்றுநோய் ரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று நோய் குறித்துவிழிப்புணர்வுதுண்டுபிரசுரங்கள் அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் சமூக பரவால் ஏற்படாத வகையில் அரசு தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தின் மூலம்
கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். ஆய்வின்போது தூத்துக்குடிசார்ஆட்சியர்திரு.சிம்ரோன்ஜீத்சிங்காலோன்,இ.ஆ.ப.,துணைஆட்சியர் திருமதி.சுப்புலட்சுமி, கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.கோமதிராஜேந்திரன்,தூத்துக்இ  வட்டாட்சியர்திரு.செல்வகுமார், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.பானு, கருங்குளம் துணை வட்டாட்சியர் திரு.சங்கரநாராயணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.பார்வதிநாதன் (செய்துங்கநல்லூர்), திரு.குமாரவேல்ஜாண்சன்துறைமணி (கூட்டாம்புளி), மருத்துவர்கள்
மரு.ஜெனிபர்வித்தியா,மரு.மேரிஸ்டெல்லா, வட்டார மருத்துவ அலுவலர் திரு.விமோனிஸ், ஊராட்சி செயலர் திரு.சங்கரபாண்டியன்(செய்துங்கநல்லூர்) மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்

கருத்துகள்