முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைப்பு

கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 700 நபர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு வழி அனுப்பி வைப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு மாலத்தீவில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த JALASHWA  கப்பல் மூலம் வருகை தந்த தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த  700 நபர்களை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர் திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் இன்று (07.06.2020) வரவேற்று பயணிகள் கப்பலில் இருந்து இறங்கியதுடன், கைகளை சுத்தம் செய்தற்கு சாணிடைசர் வழங்கப்பட்டதையும், உடமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல்வெப்பநிலை கண்டறிய செய்யப்பட்ட தெர்மல் ஸ்கிரினிங்  பணிகளையும்  பார்வையிட்டார்கள்.               மேலும் பேருந்துகளில் பயணிகளை அழைத்து சென்று காத்திருப்போர் அறையில் மாவட்ட வாரியாகபிரித்து,குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை சோதனைசெய்யும்பணிகளையும், பயணிகளுக்கு மதிய உணவு, குடிநீர் பாட்டில்கள் ஆகியவற்றை வழங்கி மீண்டும்பேருந்துகளில் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழகத்தின் தலைவர்திரு.டி.கே.ராமச்சந்திரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப்நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்பார்வையிட்டார்கள்.   பின்னர் மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப்நந்தூரி,இ.ஆ.ப.,அவர்கள் செய்தியாளர்களிடம்   தெரிவித்தாவது:

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆபரேசன் சமுத்திரா சேது திட்டத்தின் கீழ் ஏற்கனவே இலங்கை நாட்டில் இருந்து 686 நபர்கள் கடந்த 02.06.2020 அன்று வருகை தந்தார்கள்.அவர்கள் அனைவருக்கும் முழுமையாக பரிசோதனை செய்ததில், திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த ஒரு நபர்க்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், இந்திய கடற்படை சார்ந்த JALASHWA  கப்பல் மாலத்தீவில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பு 700 நபர்களைகளுடன் புறப்பட்டு இன்று 07.06.2020 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வந்தது. இது நமது மாவட்டத்திற்க்கு வருகை தந்த இரண்டாவது கப்பல் ஆகும். இந்த கப்பலில் தமிழகத்தை  சார்ந்த 509 நபர்களும், பிற மாநிலங்களை சார்ந்த சுமார் 200 நபர்களும் வருகை தந்தார்கள். வருகை தந்த வெளிமாநில பயணிகளுக்கு கொரானா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தபடுவார்கள்.  பின்னர் மீண்டும் 7 நாட்கள் பிறகு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று இல்லாதவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்று கப்பல் மூலம் வந்த பயணிகள் இறங்கியதுடன் பயணிகளுக்கு உடனடியாக தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்பட்டது. நோய்கள் இல்லாத நபர்களுக்கு குடிவரவு நுழைவு மற்றும் உடைமைகளை சோதனைகளை செய்து மாவட்டம் வாரியாகபிரித்து 25 பேருந்துகளில் அவர்களது மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க்பபட்டுள்ளது. பயணிகள் வருகையை முன்னிட்டு ஏற்கனவே அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு  பயணிகளின் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவர்களது மாவட்டங்களுக்கு சென்று அடைந்தவுடன், அரசு தெரிவித்தள்ள          விதிகளின்படி கொரோனா தொற்று பரிசோதனைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பரிசோதனை முடிவில் கொரோனா இல்லாத நபர்கள் வீட்டுக்கு   அனுப்பி வைக்கப்படுவார்கள். நமது மாவட்டத்தை சார்ந்த 50 பயணிகளும், கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 160 பயணிகளும், ஆந்திரா,பீகார், உத்திரபிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த நபர்களும் இந்தகப்பலின் மூலம் இன்று வருகை தந்தார்கள். கப்பல் மூலம் வருகை தந்த பயணிகளுக்குஅனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு, தேவையான குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வருவாய்த்துறை, சுங்கத்துறை, மாவட்ட நிர்வாகம்மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில் சிறப்பாகசெய்யப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஈரான் நாட்டில் இருந்து வருகிற 21.06.2020 அன்று சுமார் 700 மீனவாக் ள் நமது மாவட்டத்திற்க்கு வருகை தர உள்ளார்கள். அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம்மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில்மேற்கொள்ளப்பட்டு வருகிற என தெரிவித்தார்.
   
     நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் திரு.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கூடுதல்
ஆட்சியர்(வருவாய்)திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத்சிங் காலோன், இ.ஆ.ப., தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் திரு.பிமல் குமார்ஜா,உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எம்.பிரித்திவிராஜ்,இ.ஆ.ப., துறைமுக பொறுப்புக்கழக முத  பொறியாளர் திரு.ரவிகுமாதிருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்பிரியா, மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்களின்  நேர்முக உதவியாளர்கள் திருமதி அமுதா (பொது),திரு.பாலசுப்பிரமணியன்(வளர்ச்சி) முதன்மை மருத்துவ அலுவலர் (துறைமுகம்) மரு.பூர்ணிமா, உதவி ஆணையர்(கலால்திரு.சுகுமார், சமூக பாதுகாப்பு திட்டதனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன், தூத்துக்குடி ம வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், டிராபிக் மேனேஜர்(துறைமுகம்); திரு.பிரபாகர்,தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சசிகுமார்,வட்டாட்சியர்கள் மற்றும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலர்கள் ; கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்