முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

தூத்துக்குடியில் பஜாஜ் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி பெரிய பள்ளிவாசல் அருகே வணிக வளாகத்தில் பஜாஜ் ஃபின்சர்வ் என்னும் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று செல்போன், டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியவர்களுக்கு கடந்த 3 மாதமாக பெனால்டி தொகை வசூலித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அரசு மூன்று மாதங்கள் தவணை செலுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள்தவணைசெலுமல் இருந்துள்ளனர். 

ஆனால் அரசு உத்தரவை மீறி இந்நிறுவனம்பெனால்டி வசூலித்துள்ளது. ரூ.4ஆயிரத்திற்கு 920 ரூபாயும், 2ஆயிரத்திற்கு 560 ரூபாயும் பெனால்டி தொகையாக அந்நிறுவனம் வசூலித்துள்ளது.         இதனால் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் திரளானோர் அந்த நிதி நிறுவனத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்தியபாகம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனிடையே நிதி நிறுவனம் மூடப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்