தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல்

 தரிசு நிலங்களை பண்படுத்தி வேளாண்மை 
செய்திட 50 சதவிகித அரசு மானியம் - மாவட்ட ஆட்சித்தலைவர் 
சந்திப் நந்தூரி , இ.ஆ.ப., அவர்கள் தகவல் 
------------------------------------------------------------------------------------------------------------ 
 தமிழ்நாடு அரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரு மடங்கு 
உற்பத்தி மூன்று மடங்கு லாபம் என்ற இலக்குடன் தொடர்ந்து முற்போக்கான, 
புதுமையான திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்த வருடம் 2020-
21 மத்திய அரசுடன் இணைந்து பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்து 
பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, 5 ஆண்டுகள் அல்லது அதற்கு 
மேலாக தரிசாக போடப்பட ;டுள்ள நிலங்களை மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக 
நிலத்தைப் பண்படுத்தும் செலவில் 50 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை 
செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை, தரிசாக உள்ள நிலங்களை 
பண்படுத்தி சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதற்கு 250 எக்டர் இலக்கும், பயறு வகை 
பயிர்கள் பயிரிட 250 எக்டர் இலக்கும், எண்ணெய் வித்து பயிர்கள் பயிரிடுவதற்கு 50 
எக்டர் இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் புள்ளியியல ; துறை கணக்கின்படி ஆழ்வார்திருநகரி 
வட்டாரத்தில் கிட்டத்தட்ட 7150 எக்டர், கருங்குளம் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 8460 
எக்டர், கயத்தார் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 11706 எக்டர், கோவில்பட்டி 
வட்டாரத்தில் கிட்டத்தட்ட 14993 எக்டர், ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில ; கிட்டத்தட்ட 
13563 எக்டர், புதூர் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 3945 எக ;டர், சாத்தான்குளம ; 
வட்டாரத்தில் கிட்டத்தட்ட 11631 எக்டர், திருவைகுண்டம் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 
5249 எக்டர், திருச்செந்தூர் வட்டாரத்தில் கிட்டத்தட்ட 4828 எக்டர், தூத்துக்குடி 
வட்டாரத்தில் கிட்டத்தட்ட 13567 எக ;டர், உடன்குடி வட்டாரத்தில் கிட்டத்தட்ட 6219 
எக்டர், விளாத்திகுளம்; வட்டாரத்தில் கிட்டத்தட்ட 5873 எக்டர் தரிசாக உள்ளது. 
 அனைத்து வட்டாரத்திலும் ஒரு வருவாய் கிராமத்தில் 25 ஏக்கருக்கு மேல் 
தரிசாக நிலங்கள் இருந்தால் அதை விளை நிலமாக மாற்ற அக்கிராமத்திற்கு 
முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேளாண்மை துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்காக வேளாண்மை துறை அலுவலர்கள் நிலங்களை ஆய்வுசெய்யும் பணியில ; ஈடுபட்டுள்ளனர்.                               
 முன்னுரிமை அடிப்படையில் முதலில் வரும் விவசாயிகள் ஆவனங்கள் சரியாக 
இருக்கும் பட்சத்தில் திட ;டத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர். விவசாயிகள்தங்களிடம்உள்ள5ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக போடப்பட்டுள்ள நிலங்களை பண்படுத்திட அரசு மானியம் பெறஅந்தந்த வட்டாரத்தில்உள்ளவேளாண ;மை விரிவாக்க  மையத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப.,அவர்கள்தெரிவித்துள்ளார். 

கருத்துகள்