முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ழுழு ஊரடங்கை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு


கொரோனா வைரஸ்பரவலைதடுப்பதற்குஇன்றுமுழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 
நிலையில், ஊரடங்கு அமல்படுத்தி வருவது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று மாவட்டம் முழுவதும்நேரில்சென்றுஆய்வு.தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (12.07.2020) ஒரு நாள்முழுஊரடங்குஅமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய இரு ஞாயிற்று க்கிழமைகளிலும் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.                                       
இன்று மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஊரடங்கு அமல்படுத்தும் பணியிலும், 
பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்காமல் இருப்பதற்கான 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
காவல்துறையினரின் இப்பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி முதலில் இன்று (12.07.2020) காலை தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பில் ஆய்வு செய்தார். அப்போது ‘இன்று ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள்தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம்    என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும்,மேலும் தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் 
வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி நகரில் 35 இடங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும்    இடங்களில் சுமார் 2000 போலீசார் இதுபோல் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று காவலர்களுக்கும் தினமும் கொரோனா வைரஸ் தடுப்பு 
முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.                                                               
அனைவரும்100 சதவிகிதம் முகக் கவசம் அணியவேண்டும்,கையுறைஅணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றும் காவல்துறையில் கொரோனா வைரஸ் தொற்று எற்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.” என்று தூத்துக்குடிமாவட்டகாவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார்அவர்கள்தெரிவித்தார்.இந்தஆய்வின்போதுதூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள், உதவி ஆய்வாளர்திரு. சிவராஜா , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்