முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஊக்க தொகை

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.2,500 ஊக்கதொகையாக வழங்கப்படும்; - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
-------------------------------------------------------------- 

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கறிகளை பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளால் குறிப்பாக கத்திரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை, வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி, பரங்கி, சுரை போன்ற காய்கறிகள்  அனைத்து வட்டாரங்களில்  பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
       
திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதை, நடவு செடிகளின் விலை பட்டியல்,  கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற 10(1) அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட வயலின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை அந்தந்த வட்டார  தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் சமர்ப்பித்து பயன் அடையவும் இந்த திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும், திருச்செந்தூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9092861549),                         கயத்தார், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9751459404), விளாத்திகுளம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9600342052), கருங்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (9952628678), சாத்தான்குளம்;, தோட்டக்கலை உதவி இயக்குநர் (7639516199), தூத்துக்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (6374275754), ஸ்ரீவைகுண்டம், தோட்டக்கலை உதவி இயக்குநர் (8807653887), ஆழ்வார்திருநகரி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (6369389361), புதூர், தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), கோவில்பட்டி, தோட்டக்கலை உதவி இயக்குநர் (9750549687), ஒட்டப்பிடாரம், தோட்டக்கலை உதவி இயக்குநர், (9976531000), உடன்குடி, தோட்டக்கலை உதவி இயக்குநர், (8248566263) தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்