
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக டி.ஐ..ஜி திரு.பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப அவர்கள்மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்கண்காணிப்பாளர்திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (04.07.2020) அன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல் நிலையங்களில்; பணிபுரியும் உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை கூட்டம் திருநெல்வேலி சரக டிஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப மற்றும் மாவட்ட எஸ்.பி. திரு. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உதவி ஆய்வாளர்கள் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல் நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல் நிலையப்பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்கள். பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொது மக்களின் நண்பன் என்பதைநிரூபிக்கும்வகையில்நமதுசெயல்பாடுஇருக்கவேண்டும்என்றும்அறிவுறுத்தினார்கள். மேலும் பொதுமக்களிடம் சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்எச்சரித்தனர். இக்கூட்டத்தில்காவல்துறைகூடுதல்கண்காணிப்பாளர்திரு.செல்வன்,காவல்துணைகண்காணிப்பாளர்கள், தூத்துக்குடி நகரம் திரு. கணேஷ், தூத்துக்குடி ஊரகம் திரு. பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் திரு. சுரேஷ்குமார், கோவில்பட்டி திரு.கலைக்கதிரவன், விளாத்திக்குளம் திரு. பீர் மொஹைதீன், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள்பிரிவு திரு.பழனிக்குமார் மற்றும் மாவட்ட குற்ற ஆவண கூடம் திரு. நாகராஜன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து
காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக