முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்


துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் வயல்களில் நுண்ணீர்ப் பாசன முறையினை அமைத்து பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
---------------------------------------------------------------------
தமிழ்நாடு நீர்ப்பற்றாக்குறை உள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர் பாசனமுறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, கீழ்;க்காணும் துணைநிலை நீர் மேலாண்மை பணிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.
பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு ஃ துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25000/-
டீசல் பம்புசெட் ஃ மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15.000 /-த்திற்கு மிகாமலும்.
வயலுக்கு அருகில் பாசனநீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசனகுழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத்தொகை எக்டருக்கு ரூ.10.000/-க்கு மிகாமலும்,
பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒருகனமீட்டருக்கு    ரூ.350/-க்கு மிகாமலும், நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ.40.000/-க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கான மானியம் பெறுவதற்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பெயரினை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பணிகளை விவசாயிகள் முதலில் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு இப்பணிகளுக்கான மானியம், நுண்ணீர்ப் பாசன அமைத்து மானியத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இத்துணைநீர் மேலாண்மைக்கான மானியத்தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிற்கு நேரிடையாக விடுவிக்கப்படும்.
புhசன நீரினை சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப் பாசன முறையினை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் ஆதார வசதியினை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்             திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்