முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

}த்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் தோமையார் கோவில் தெரு நோய்கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, 
வீடாக சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு 
ஆய்வு செய்தார். மேலும், நோய்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள வீட்டில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்து, படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மூலம்மாவட்டநிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். 
பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:                
தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 
பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஏற்கனவே மாண்புமிகு செய்தி மற்றம் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களால் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் 
துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட 
பொதுமக்களுக்குமருத்துவபரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான நபர்களை அரசு மருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின்உத்தரவுப்படிமாவட்டநிர்வாகத்தின் மூலம் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு 
வருகிறது.                                                                                                                                            இன்று தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட திரேஸ்புரம் நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில்மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும், வீடு, வீடாக சென்று 
தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்யும் பணிகளும் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளபடி, பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளி வர வேண்டும். 
வீட்டில் இருந்து வெளி வரும்போது கட்டாயமாக முககவசங்கள் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க 
வேண்டும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், இ.கா.ப., மாநகராட்சி ஆணையர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் 
திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்