முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி போக்கு வரத்து காவல் துறைக்கு 100 தடுப்புகள் ( பேரி கார்டுகள் )

14-08-2020   தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறைக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பாக 100 தடுப்புகள் (பேரிகார்டுகள் )   வழங்கும் நிகழ்ச்சியும், பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக தூத்துக்குடி மாநகர காவல்துறை போக்குவரத்து பிரிவுக்கு முதற்கட்டமாக 100 தடுப்புகளை ( பேரிகார்டுகள்) இன்று குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை பிரிவுக்கு தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பொது மேலாளர் திரு. சுரேந்திரன், மண்டல மேலாளர் திரு. மோகன்ராஜ், முதுநிலை மேலாளர்கள் குமரேசன் மற்றும் முருகேசபாண்டி ஆகியோர் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தடுப்புகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளையும, அதனை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பின் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ், திரு. ராஜாமணி, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்