தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில். 1.71 கோடி மதிப்பிலான கடன் உதவி. அமைச்சர் கடம்பூர் ராஜீ வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் வானரமுட்டியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் 315 மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனி நபர்களுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 102 நபர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்
--------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் வானரமுட்டியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.08.2020) நடைபெற்றது. விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் 315 மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனி நபர்களுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 102 நபர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்
நிகழ்ச்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கினார்கள். மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் அவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கடன் உதவிகள் வழங்கப்பட்டு பல்வேறு தொழில்களை தொடங்கி லாபகரமாக நடததி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் அம்மா அவர்கள் மகளிர் சுய உதவி குழுக்களுக்காக தொடங்கப்பட்ட அத்தனை திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாகவும் மகளிரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் அதிக அளவிலான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் வகையில் பல்வேறு உதவிகள் செய்யபப்படுகிறது.
இன்று வானரமுட்டியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் 315 மகளிர் சுய உதவிக்குழு மற்றும் தனி நபர்களுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான கடன் உதவிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 102 நபர்களுக்கு ரூ.40 லட்சமும் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கடன் (8குழு) 99 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சமும், கோவிட் 19 சிறப்பு மகளிர் சுய உதவிக்குழுக் கடன் (1குழு) 15 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும், மகளிர் சுய உதவி குழுக்கடன் (7 குழு) 87 பயனாளிகளுக்கு ரூ.24.90 லட்சமும், சிறு வணிக கடன் 62 பயனாளிகளுக்கு ரூ.24.30 லட்சமும், மாற்றுதிறனாளி கடன் 1 பனாளிக்கு ரூ.50000, கறவை மாடு கடன் 18 பயனாளிகளுக்கு ரூ.17.64 லட்சமும், மகளிர் தொழில் முனைவோர் கடன் 8 பயனாளிகளுக்கு ரூ.3.90 லட்சமும், வீட்டு அடமானக் கடன் 3 பயனாளிகளுக்கு ரூ.15.50 லட்சமும், வீட்டு வசதி கடன் 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சமும், நுகர் வோர் கடன் ரூ.50000, சம்பளக் கடன் 8 பயனாளிகளுக்கு ரூ.15.80 லட்சமும், பணிபுரியும் மகளிர் கடன் 1 பயனாளிக்கு ரூ.2 லட்சமும், சிறு குறு தொழிற்கடன் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சமும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கடன் (8 குழு) 102 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சமும் என மொத்தம் 417 பயனாளிகளுக்கு ரூ.211.04 லட்சமும் கடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மகளிர் குழுவினர் பயன்படுத்தி வாழ்க்தைதரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா, மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் திரு.அன்புராஜ், கோவில்பட்டி சரக கூட்டுறவு துணை பதிவளர் திரு.ஜெயசீலன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் திரு.வெற்றிவேலன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.அந்தோணி, மாவட்ட கவுன்சிலர் திருமதி.பிரியாகுருராஜ், வானரமுட்டி கூட்டுறவு சங்க தலைவர் திரு.சுந்தரர்ராஜ், வானரமுட்டி கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் திருமதி.கவிதா, முக்கிய பிரமுகர்கள் திரு.வினோபாஜி, திரு.வண்டானம் கருப்பசாமி, திரு.செல்வம், திரு.அலங்காரபாண்டியன், திரு.சோலைசாமி, திரு.பழனிகுமார் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக