முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரோனா தொற்று பணியினை தைரியத்தோடும் அர்பணிப்போடு எதிர் கொண்டு மீண்ட காவலர்கள் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு:



தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து  மீண்டு  பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 38 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் காவல் நிலையம் ஆய்வாளர் திரு. பட்டாணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. லட்சுமி பிரபா, முதல் நிலைக் காவலர் திருமதி. ராமலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம்; காவல் நிலையம் ஆய்வாளர் திருமதி. சொர்ணராணி, சிறப்பு உதவி ஆய்வளார் திரு. பிள்ளைமுத்து, முதல் நிலை பெண் காவலர் திருமதி. திருவரங்கசெல்வி, காவலர் திரு. நித்தியானந்தன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு ஆய்வளார் திரு. மயிலேறும் பெருமாள், தூத்துக்குடி தெற்கு போக்குவரத்து பிரிவு தலைமைக் காவலர் திரு. சேரந்தையன், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சங்கர், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தாமஸ், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஞானராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பெஞ்சமின், முதல் நிலைக் காவலர் திரு. ஆறுமுக சாமி, கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வளார் திரு. செந்தில்வேல்முருகன், காவலர் திரு. ராஜாராம், சேரகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பிரேம் குமார், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. தாமஸ், தலைமைக் காவலர் திரு. வெலிங்டன், ஆழ்வார் திருநகரி காவல் நிலையம் தலைமைக் காவலர் திரு. துரைராஜ்பாண்டியன், முதல் நிலைக் காவலர் திரு. செல்வ கோட்டார், காவலர் திரு. ஜவஹர், காவலர் திரு. சதாகுட்டி, முத்தையாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு. சுப்பையா , தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமைக் காவலர்  திரு. மருதாச்சலம், சூரங்குடி காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. அழகுராஜ், முறப்பநாடு காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. ஹரிகிருஷ்ணன், நாசரேத் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. கார்த்திக், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண்காவலர் திருமதி. ரேவதி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர் திரு. தினேஷ், ஆத்தூர் காவல் நிலைய பெண் காவலர் திருமதி.  பிரியங்கா, கயத்தார்  காவல் நிலைய பெண் காவலர் திருமதி.கனகலெட்சுமி, ;படை காவலர்கள் திரு. காமேஷ், திரு. லெட்சுமிகாந்த், திரு. தமிழ்ச்செல்வன், திரு. சதீஷ், திரு. சிவகணேஷ், திரு. விஷ்வா           ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 38 காவல்துறையினருக்கு இன்று (11..08.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்  பழக்கூடை வழங்கி கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன் மற்றும் கோபி ஆகியோர் உடனிருந்தனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்