ஓய்வூதிய பணத்தை வங்கியிலிருந்து எடுக்கவில்லையா? " அரசு திடீர் முடிவு "

 

                                                                           ஓய்வூதியம் எடுக்கவில்லையா?  இறந்த தாக கருத அரசு முடிவு                                                                                                                                                                                                                                                                                                                                                                              ஓய்வூதிய கணக்கில், ஆறு மாதம் பரிவர்த்தனை மேற்கொள்ளவில்லை எனில், வரவு வைக்கப்பட்ட ஓய்வூதிய தொகையை திருப்பி அனுப்புங்கள்' என, வங்கிகளுக்கு, தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை கடிதம் அனுப்பி உள்ளது.*

அரசு துறைகளில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள், தங்களின் உயிர்வாழ் சான்றிதழை, ஆண்டுதோறும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில், ஓய்வூதியம் பட்டுவாடா செய்யும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.*

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பு ஆண்டு உயிர்வாழ் சான்று வழங்க வேண்டாம்; அடுத்த ஆண்டு வழங்கினால் போதும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

 இந்நிலையில், ஆறு மாதமாக வங்கி கணக்கில் பரிவர்த்தனை நடைபெறவில்லை எனில், வரவு வைக்கப்பட்ட ஓய்வூதிய தொகையை திருப்பி அளிக்க, கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:*

கொரோனா தொற்று காரணமாக, ஓய்வூதியதாரர்கள், உயிர்வாழ் சான்றிதழை நடப்பு ஆண்டு வழங்க வேண்டாம் என, அரசு உத்தரவிட்டது.*

இந்நிலையில், தமிழ்நாடு கருவூல கணக்குத் துறை கமிஷனர் சத்தியமூர்த்தி, ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.*

அதில், 'ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய தொகை வரவு வைக்கப்பட்டு, ஆறு மாதமாக செயல்பாட்டில் இல்லாத, வங்கி கணக்கு விபரங்களை, கருவூலத்திற்கு  திரும்ப அனுப்ப வேண்டும்'.*

அவ்வாறு, ஆறு மாதம் பணம் எடுக்கவில்லை எனில், அந்த ஓய்வூதியதாரர் இறந்ததாக கருதி, அந்த கணக்கிற்கு வரவு வைப்பது நிறுத்தப்படும்.

மேலும், ஏற்கனவே வரவு வைக்கப்பட்டு, எடுக்காத ஓய்வூதிய தொகையை, அரசு வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்ப வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது

கருத்துகள்