முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காயல்பட்டிண த்தில் கொரோணா வைரஸ் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி


தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக்குடிநீh வழங்கப்பட்டது.  

    01.08.2020 அன்று மாலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவக்கைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பின் அங்கிருந்த பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், இந்த மூன்றை கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும், 

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அது அதிகரிப்பதற்கு கபசுரக்குடி நீர் குடிப்பது, சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, சத்தான காய் கனிகளை உட்கொள்ளவதன் மூலம் நம்மை நாமே பாதுக்காத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார். 

இக்கூட்டத்திற்கு காயல்பட்டினம் ஐக்கிய பேரவை அமைப்பு தலைவர் திரு. கலாமி ஆஜிம்யார், செயலாளர் நவாஸ் அகமது மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத், ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி, இதர காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்