மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜாரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீh, அரிசி பைகள், காய் கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நேற்று (01.08.2020) மாலை தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஜார் பகுதியில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், அரிசி பைகள், காய்கறி வகைகள் மற்றும் முகக்கவசம் வழங்கி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், எந்த ஒரு இடத்திலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும் என்றும்,
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும், அது அதிகரிப்பதற்கு கபசுரக்குடி நீர் குடிப்பது, சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, சத்தான காய் கனிகளை உட்கொள்வது ஆகியவற்றின் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் உடன்குடி ஊர் முக்கியஸ்தர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாரத், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக