முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

 


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் மதுரை - தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.09.2020 அன்று நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------------------------------------------------------------------------------

   தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை 21.04.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் (ஊழஎனை -19) நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது மற்றும் நிர்வாக காரணத்தினால் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு  3(2)- ன் கீழான பொது விசாரணை 17.09.2020 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு சவரிமங்கலம் கிராமத்திற்கும் பிற்பகல் 5.00  மணிக்கு தெற்குவீரபாண்டியாபுரம் கிராமத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்