இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் மதுரை - தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.09.2020 அன்று நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்
------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை 21.04.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் (ஊழஎனை -19) நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது மற்றும் நிர்வாக காரணத்தினால் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான பொது விசாரணை 17.09.2020 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு சவரிமங்கலம் கிராமத்திற்கும் பிற்பகல் 5.00 மணிக்கு தெற்குவீரபாண்டியாபுரம் கிராமத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக