முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

 


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் மதுரை - தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.09.2020 அன்று நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------------------------------------------------------------------------------

   தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை 21.04.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் (ஊழஎனை -19) நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது மற்றும் நிர்வாக காரணத்தினால் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு  3(2)- ன் கீழான பொது விசாரணை 17.09.2020 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு சவரிமங்கலம் கிராமத்திற்கும் பிற்பகல் 5.00  மணிக்கு தெற்குவீரபாண்டியாபுரம் கிராமத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...