மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன்




தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


      தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு  மத்திய அரசு அறிவிப்பின்படி மீனவர் கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.                                                                                                                                     

     இத்திட்டத்தின் மூலம் மீன்பண்ணை, இறால் பண்ணை புதியதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், நீர்தேக்கம், குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்த்தல், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் வளர்த்தல், பண்ணை குட்டையில் மீன்குஞ்சுகள் வளர்த்தல், கடலில் கூண்டுகளில் மீன்வளர்த்தல், கடலில் கடற்பாசி வளர்த்தல், மீன் விற்பனை செய்பவர்கள், சங்கு குளிப்பவர்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், வண்ணமீன் வளர்ப்போர்களுக்கு செயல்பாட்டு செலவுகளுக்கு கடன் அட்டை வழங்கப்படவுள்ளது.                                                                                                                                            

   எனவே இத்திட்டம் குறித்த விண்ணப்பங்கள், விவரங்கள் மற்றும் கூடுதல் ஆலோசனைகளை வடக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது      0461-2320458 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 



கருத்துகள்