முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு

         


                                                                                                                                                                                                                    தமிழக  ,முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட  வட்டாட்சியர் அலுவலகத்தில்   அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைப்பு                                                                                                                                                                                                                                                            

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் புதிதாக கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

-------------------------------------------------------------------------------------------------------      

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் ரூ.277.48 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் கடந்த மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய வட்டாட்சியர் அலுவலகத்தினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மற்றும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சதன்பிரபாகர் பங்கேற்றார்.                                                                                                                                                       


மாண்புமிகு வருவாயத்துறை  அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வட்டாட்சியரிடம் வழங்கி உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்களை  நில அளவைப்பிரிவு அலுவலர்கள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், கிராம உதவியாளர் சங்கத்தினர் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பாக  பணியாற்றி அரசுக்கும், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நல்ல பெயர் பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் திரு.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி.பிரியா குருராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திரு.அய்யப்பன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்கள் திரு.திரவியம், கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ஜோதிபாசு, திரு.கருப்பசாமி, நில அளவை வட்ட துணை ஆய்வாளர் திரு.ஸ்டான்லி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகள் திரு.மாரிச்சாமி, திரு.சுப்பையா, கிராம உதவியாளர் சங்க மாநில பொறுப்பாளர் திரு.அய்யப்பன், முக்கிய பிரமுகர்கள் திரு.வினோபாஜி, திரு.குருராஜ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

:                                        

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்