ரூ.6.67 இலட்சம் மதிப்பில் 2 உயர்கோபுர சோலார் விளக்குகள் ஆட்சி த் தலைவர் ஆய்வு


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பத்மநாபமங்கலம் ஊராட்சியில் கனிம நிதி மூலம் தலா ரூ.6.67 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர சோலார் விளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

--------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பத்மநாபமங்கலம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர சோலார் விளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.10.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனிம நிதி மூலம் தலா ரூ.6.67 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உயர்கோபுர சோலார் விளக்குகள் 10 அமைக்கவும், தெருவிளக்குகள் கூடுதலா 30 அமைக்கவும் வேண்டும் என கோரிக்கை வரப்பெற்றது.  

இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று உயர்கோபுர சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கூடுதலாக தெருவிளக்குகள் அமைய உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள சிறு பாலத்தினை பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும், கிராம பகுதியில் சாலையோரங்களில் உள்ள செடி, புதர்கள் அதிகமாக உள்ளது. அவற்றை அகற்றிவிட்டு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும் எனவும் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் அவர்களிடம் தெரிவித்தார். மேலும் பத்மநாபமங்கலம் ஊராட்சியில் ஏற்கனவே 240 தெருவிளக்குகள் உள்ளது. கூடுதலாக தேவைப்படும் தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர சோலார் விளக்குகள் ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கிராம பகுதிகள் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மக்கள் வெளியே வரும்போது மாஸ்க் அணிய வேண்டும், சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்திட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., வட்டாட்சியர் திரு.கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.நாகராஜன், ஊராட்சி தலைவர் திருமதி.சிவகாமி வைகுண்டபாண்டியன், துணைத்தலைவர் திருமதி.பத்மாவதி பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.பிரேம்சந்தர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 


கருத்துகள்