முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூ.6.67 இலட்சம் மதிப்பில் 2 உயர்கோபுர சோலார் விளக்குகள் ஆட்சி த் தலைவர் ஆய்வு


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பத்மநாபமங்கலம் ஊராட்சியில் கனிம நிதி மூலம் தலா ரூ.6.67 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர சோலார் விளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

--------------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பத்மநாபமங்கலம் ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர சோலார் விளக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.10.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கனிம நிதி மூலம் தலா ரூ.6.67 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2 உயர்கோபுர சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் உயர்கோபுர சோலார் விளக்குகள் 10 அமைக்கவும், தெருவிளக்குகள் கூடுதலா 30 அமைக்கவும் வேண்டும் என கோரிக்கை வரப்பெற்றது.  

இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று உயர்கோபுர சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கூடுதலாக தெருவிளக்குகள் அமைய உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள சிறு பாலத்தினை பராமரிப்பு செய்திட வேண்டும் எனவும், கிராம பகுதியில் சாலையோரங்களில் உள்ள செடி, புதர்கள் அதிகமாக உள்ளது. அவற்றை அகற்றிவிட்டு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டும் எனவும் ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் அவர்களிடம் தெரிவித்தார். மேலும் பத்மநாபமங்கலம் ஊராட்சியில் ஏற்கனவே 240 தெருவிளக்குகள் உள்ளது. கூடுதலாக தேவைப்படும் தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர சோலார் விளக்குகள் ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  கிராம பகுதிகள் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், மக்கள் வெளியே வரும்போது மாஸ்க் அணிய வேண்டும், சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்திட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., வட்டாட்சியர் திரு.கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.நாகராஜன், ஊராட்சி தலைவர் திருமதி.சிவகாமி வைகுண்டபாண்டியன், துணைத்தலைவர் திருமதி.பத்மாவதி பாலகிருஷ்ணன், உதவி பொறியாளர் திரு.பிரேம்சந்தர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்