திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு

திருச்செந்தூரில்; புதிய. போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையம் திறப்பு      




தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில்; புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை புறக்காவல் நிலையத்தை இன்று   மாவட்ட   காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


இன்று (14.10.2020) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்செந்தூர் மெயின் ஆர்ச் அருகே திருச்செந்தூர் போக்குவரத்து துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட ஒலிப்பெருக்கி வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்தார். 


அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் நோக்கமாகும். மேலும் தூத்துக்குடியின் முக்கிய நகரமான திருச்செந்தூர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும்  மக்கள் அடிக்கடி அதிகம் கூடுமிடமாகும். அதனால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடமாக திருச்செந்தூர் உள்ளது. இவ்வாறு அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைத்து மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு இப்புறக்காவல் நிலையம் போக்குவரத்து காவல்துறை முயற்சியால் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்புறக்காவல் நிலையம் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைக்கப்படும் என்றும், கொரோன தொற்று நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பதற்கு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசிகொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார். பின் இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுரகுடீநீர் மற்றும் முகக் கவசம் வழங்கினார்.  


இந்நிகழ்வின் போது திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் சிங் இ.கா.ப, திருச்செந்துர் கோவில் காவல் நிலைய  ஆய்வாளர் திரு. ஞானசேகரன், திருச்செந்தூர்; காவல் நிலைய ஆய்வாளர் திரு. முத்துராமன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், திருச்செந்தூர் வியாபாரிகள் சங்க தலைவர்கள் திரு. கணேசன். திரு. காமராஜ், திரு. பெரியசாமி மற்றும்; பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

கருத்துகள்