கடம்பூரில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சரிடம் , அமைச்சர் .கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை



தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நின்று செல்ல மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கோரிக்கை கடிதம்

------------------------------------------------------------------------------------------------------------ 


மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்கள் ஆகியோருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை எக்மோர் மற்றும் அனந்தபுரி இடையே இயக்கபட்டு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (06723 06724) கோவிட் 19 கொரோனா காலத்தில் சேவை நிறுத்தபட்டு இருந்தது.  

தற்பொழுது  சென்னை எக்மோர்  மற்றும் அனந்தபுரி இடையே பயண சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.  முன்னதாக மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கு நான் வைத்த கோரிக்கையை ஏற்று எனது கோவில்பட்டி தொகுதியில் உள்ள கடம்பூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து அனந்தபுரி செல்லும் பொழுதும், அனந்தபுரியில் இருந்து சென்னை செல்லும் பொழுதும் இரு வழித்தடங்களிலும் தொடர் வண்டி பயணிகளுக்காக நின்று செல்லும்.  

தற்போது கோவிட் 19 கொரோனா கட்டுப்பாடுகளை தளர்;த்திய பின்பு மீண்டும் தொடர் வண்டி சேவை தொடங்கபட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலானது கடம்பூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் இயக்கபட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இனி வரும் காலங்களில் எனது கோரிக்கையை ஏற்று மீண்டும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலானது கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது இப்பகுதி மக்களுக்கு ரயில் பயணத்தினை எளிதில் மேற்கொள்ளவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.



கருத்துகள்