முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடம்பூரில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நின்று செல்ல மத்திய ரயில்வே அமைச்சரிடம் , அமைச்சர் .கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை



தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நின்று செல்ல மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கு மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கோரிக்கை கடிதம்

------------------------------------------------------------------------------------------------------------ 


மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்கள் ஆகியோருக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை எக்மோர் மற்றும் அனந்தபுரி இடையே இயக்கபட்டு வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (06723 06724) கோவிட் 19 கொரோனா காலத்தில் சேவை நிறுத்தபட்டு இருந்தது.  

தற்பொழுது  சென்னை எக்மோர்  மற்றும் அனந்தபுரி இடையே பயண சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.  முன்னதாக மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ பியுஷ் கோயல் அவர்களுக்கு நான் வைத்த கோரிக்கையை ஏற்று எனது கோவில்பட்டி தொகுதியில் உள்ள கடம்பூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து அனந்தபுரி செல்லும் பொழுதும், அனந்தபுரியில் இருந்து சென்னை செல்லும் பொழுதும் இரு வழித்தடங்களிலும் தொடர் வண்டி பயணிகளுக்காக நின்று செல்லும்.  

தற்போது கோவிட் 19 கொரோனா கட்டுப்பாடுகளை தளர்;த்திய பின்பு மீண்டும் தொடர் வண்டி சேவை தொடங்கபட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலானது கடம்பூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் இயக்கபட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே இனி வரும் காலங்களில் எனது கோரிக்கையை ஏற்று மீண்டும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலானது கடம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது இப்பகுதி மக்களுக்கு ரயில் பயணத்தினை எளிதில் மேற்கொள்ளவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்