முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு



         தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல்  போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு - பெண்ணை மீட்டு ஒப்படைத்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. 

சென்னை முகப்பேரில் உள்ள வுhந டீயலெயn என்ற சமூக சேவை அமைப்பில் பணிபுரியும் மானஷா என்பவர் தங்களது பராமரிப்பில்; மாயா என்ற பெண் இருப்பதாகவும், அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், மாயாவின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கக்கோரி, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அளித்தார். 

மேற்படி புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் தலைமையில் பெண் தலைமைக் காவலர் திருமதி. அலாய்ஷியஸ் ரொசாரி மேக்ஸினா மற்றும் காவலர் திரு. ஆறுமுக நயினார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து அவரின் உறவினர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்க தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.             

அதன்படி, மேற்படி தனிப்படையினர் பல இடங்களில் தேடி விசாரணை செய்ததில் மாயா என்னும் பெயர் கொண்ட பெண்மணி யாரும் இல்லையென்ற பதிலே கிடைத்து வந்தது. இந்நிலையில் முத்தையாபுரம் சுபாஷ் நகரில் தனிப்படையினர் விசாரணை செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது மகன் சக்தி கிருஷ்ணன் என்பவர், தனது தாயார் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவரென்றும், தாயார் பெயர் வேல்க்கனி (45) என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போனதாகவும், அது குறித்து யாரிடமும் எவ்வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். பின் சக்தி கிருஷ்ணனிடமிருந்து அவரது தாயார் புகைப்படத்தை பெற்று மேற்படி சென்னை முகப்பேரில் உள்ள சமூக சேவை அமைப்பிற்கு அனுப்பி கேட்டபோது, புகைப்படத்திலிருக்கும் பெண்மணிதான் அங்கு இருப்பதாக உறுதிபட தெரிவித்தனர். அவர்களிடமிருந்து பெண்மணியின் புகைப்படைத்தை பெற்று சக்தி கிருஷ்ணனிடம் கேட்ட போது,  அவரும் அது தனது தாயார்தான் என்று உறுதிபடுத்தினார். 

அதனடிப்படையில் சென்னை சமூக சேவை அமைப்பிலிருந்து அந்தப் பெண்ணை மீட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

கடந்த நவம்பர் மாதம் முதல் மேற்படி பெண்ணை தங்களது வுhந டீயலெயn’ என்ற சமூக சேவை அமைப்பினர் பராமரித்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு உதவிய மேற்படி அமைப்பினருக்கும்,  மேற்படி பெண் யாரென்று, அவர்களது குடும்பத்தாரையும் கண்டு பிடித்து, அவரது மகன் சக்தி கிருஷ்ணன் மற்றும் அவரது கணவர் சிவா என்பவரிடம் ஒப்படைத்த முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. அன்னராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்