முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவில்பட்டியில் தாணியங்கி சிகன்ல் மற்றும் சி.சிடி.வி கேமிரா , : மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துவக்கி வைப்பு







தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய இடங்களில் 10 சிசிடிவி கேமராக்களும், கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை சந்திப்பில் தானியங்கி போக்குவரத்து சிக்னலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அங்கேயே அமைக்கப்பட்டுள்ள தனி அறை மூலம் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராவை இன்று (02.10.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கபசுரக்குடிநீர் வழங்கினார்.  

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில் தானியங்கி கேமரா மற்றும் 10 சிசிடிவி கேமராக்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது, கோவில்பட்டி நகரம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்கள் உட்பட அனைத்து பகுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகளை தூத்துக்கு மாவட்ட காவல்துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.  அதே போல இன்று பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர், உடலில்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கான சில மூலிகை மருந்துகள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.  இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், கைகளை அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், தமிழக அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

இந்நிகழ்வின் போது கோவில்பட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு. முருகன், கோவில்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. கலைக் கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நியைல ஆய்வாளர் திரு. சுதேசன், கோவில்பட்டி மேற்கு காவல் நியைல ஆய்வாளர் திரு. அய்யப்பன்,  கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நாராயணசாமி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்