முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்துதல் - வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து , தூத்துக்குடி மாவட்ட S.P எஸ்- ஜெயக்குமார் உத்தரவு



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்துதல் மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் நிலையயை ஆய்வு செய்தல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளான உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எங்கெங்கெல்;லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் அமைத்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும், 

காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்து, அதன் மீது தினந்தோறும் எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 

காவல் துணை கண்காணிப்பாளர்கள் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களை தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அனைத்து காவல் நிலையங்களிலும் தினமும் காலை 07.00 மணிக்கு ஆஜர் அணி வகுப்பு முறையாக நடத்துதல் வேண்டும் எனவும், பொதுமக்களின் புகார்களுக்கு காவல்துறை அதிகாரிகள், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைக்காமல் சம்பவ இடத்திற்கே சென்று விசாரணை நடத்தவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்