முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு. பாராட்டு

 .

    கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 8 காவல்துறையினருக்கு. பாராட்டு

தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல்  ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

தூத்துக்குடி  மாவட்டம், குலசேகரபட்டினத்தில் 17.10.2020 முதல் 26.10.2020 வரை நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்;து பணிகளை திறம்பட செய்த குலசேகரபட்டினம் காவல் ஆய்வாளர் திருமதி. ராதிகா, திருச்செந்தூர் உட்கோட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு. பாஸ்கரன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு  உதவி ஆய்வாளர் திரு. வேல்முருகன், திருச்செந்தூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. தாமஸ் மேத்யூ மற்றும் குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் திரு. தங்கபாண்டியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளவராயநத்தம் கிராமத்தை சேர்ந்த போக்கிரி முத்து என்பவர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட தோழப்பன்;பண்ணை பகுதியில் ஆயுதத்துடன் சுற்றிதிரிந்தவரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

  காவல் ஆய்வாளர்  உட்பட 8 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. கோபி, திரு. செல்வன், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, இ.கா.ப மற்றும் பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார் ஆகியோர்  உடனிருந்தனர்.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்