திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்ச்சி




 .

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார் 

------------------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 6ம் திருநாளான சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.11.2020) பங்கேற்று தரிசனம் செய்தார். தென்மண்டல காவல் துறை தலைவர் திரு.முருகன், இ.கா.ப.,  தென்மண்டல துணை காவல் துறை தலைவர் திரு.பிரவீண்குமார் அபிநவ், இ.கா.ப., ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிட் 19 காரணமாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைகளை பின்பற்றி சூரசம்ஹார விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள அனுமதியில்லை. விழாவில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு அனைவரும் முககவசம் அணிந்து, சாணிடைசர், கை கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுடன் விதிகளை பின்பற்றி நடைபெற்றது. கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை நாடெங்கிலும் உள்ள பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கோயில் நிர்வாகத்தின் மூலமும் பல்வேறு தொலைக்காட்சிகள் மூலமும் நேரலை செய்யப்பட்டது. யுடியுப் மூலமும் நேரலை செய்யப்பட்டது.  

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திரு.ஜெயசீலன், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார், இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணுசந்திரன், இ.ஆ.ப., தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரோன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு,ஹர்ஷ்சிங், இ.கா.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.பிரித்திவிராஜ், இ.ஆ.ப., திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் திரு.கண்ணன் ஆதித்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, திருக்கோயில் இணை ஆணையர் திருமதி.கல்யாணி, உதவி ஆணையர் திரு.செல்வராஜ், வட்டாட்சியர் திரு.முருகேசன், முன்னாள் தக்கார் திரு.கோட்டை மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


கருத்துகள்