முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு

 கண மழையை பொருப் படுத்தாமல் கடமையாற்றிய போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி . நேரில் பாராட்டு




தூத்துக்குடியில் பெய்துவரும் அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் போக்குவரத்து காவலரின் கடமையுணர்வை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், அவர் பணி செய்து வரும் இடத்திற்கே நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

 தூத்துக்குடியில் இன்று (16.11.2020) கன மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியில் மிக முக்கியமான இடமான வி.வி.டி சிக்னல் என்னும் நான்கு முக சந்திப்பு அதிக போக்குவரத்து கொண்டதாகும். 


இன்று பெய்து வரும் கன மழையில் தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திரு. முத்துராஜ் மழையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு பணி செய்வதே காவல்துறையின் தலையாய பணி என கடமையுணர்வுடன் அந்த முக்கிய சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டு வருகிறார். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும்    அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 


மேலும் கடமையுணர்வோடு கனமழையைக்கூட பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மேற்படி போக்குவரத்து பிரிவு முதல் நிலை காவலர் திரு. முத்துராஜை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அந்த முக்கிய சந்திப்பான தூத்துக்குடி வி.வி.டி சிக்னலுக்கு நேரில் சென்று அங்கு போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த காவலர் முத்துராஜ்க்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். 


இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மற்றும் போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...