தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாகத்தில் இன்று (01.11.2020) மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மட்டும் 100 மரக்கன்றுகள், அதே போன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நட்டு, அங்கும் மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்துள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் 12,000 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. சுனைமுருகன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. லிவிங்ஸ்டன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மரக் கன்றுகளை நட்டனர்.
பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள் ஆகியவற்றை சுற்றி சுத்தம் செய்து, காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள், செடிகள் வைக்கப்பட்டு வருகிறது என்றும்,
கடந்த சில நாட்களுக்கு முன் 96 ஏக்கர் நிலபரப்புள்ள வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 10,000 பனைமர கன்றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த மரக்கன்றுகள் செழித்து வளரும். மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். எல்லா நாடுகளிலும் மூன்றில் ஒரு பங்கு காடு வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மரக்கன்றுகள் நடுவது இன்றோடு முடிவதல்ல, தினமும் நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட்டு, வருங்கால சந்ததியினருக்கு வளமான நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றி, காவல் துறையினருக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.
இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், தமைக்காவலர் திரு. ராஜா, திரு. வீரபாகு உட்பட காவல்துறையினர் செய்திருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக