முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

   



                                                     தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா : காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் இன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மரக்கன்றுகள் நட்டு, மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாகத்தில் இன்று (01.11.2020) மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு மரக் கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்தார். 

மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் இன்று மட்டும் 100 மரக்கன்றுகள், அதே போன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலும் மரக்கன்றுகள் நட்டு, அங்கும் மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்துள்ளார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அவர்கள் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள், வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானம் உள்ளிட்ட இடங்களில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் 12,000 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.   

மாவட்ட காவல்  கண்காணிப்பாளரை தொடர்ந்து தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. செல்வன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், உதவி ஆய்வாளர் திரு. மணிகண்டன், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. சுனைமுருகன், திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. லிவிங்ஸ்டன்  உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மரக் கன்றுகளை நட்டனர். 

பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகங்கள் ஆகியவற்றை சுற்றி சுத்தம் செய்து, காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள், செடிகள் வைக்கப்பட்டு வருகிறது என்றும்,

கடந்த சில நாட்களுக்கு முன் 96 ஏக்கர்  நிலபரப்புள்ள வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் 10,000 பனைமர கன்றுகள் நடப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த மரக்கன்றுகள் செழித்து வளரும்.    மரக்கன்றுகள் வளர்ப்பதன் மூலம் நாம் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். எல்லா நாடுகளிலும் மூன்றில் ஒரு பங்கு காடு வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மரக்கன்றுகள் நடுவது இன்றோடு முடிவதல்ல, தினமும் நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நட்டு, வருங்கால சந்ததியினருக்கு வளமான நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று சிறப்புரையாற்றி, காவல் துறையினருக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார். 

இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், தமைக்காவலர் திரு. ராஜா, திரு. வீரபாகு உட்பட காவல்துறையினர் செய்திருந்தனர். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்