நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும். பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500 - / வழங்கப்பட உள்ளது
-பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தமிழக அரசு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு துணிப்பை மற்றும் ரு.2500- /- (ருபாய் இரண்டாயிரத்து ஐநூறு மட்டும்) ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கிட உத்திரவிட்டுள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் நடைமுறையில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 04.01.2021 முதல் 12.01.2021 வரை பொங்;கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரு.2500ஃ- வழங்கப்பட உள்ளது. மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் மட்டும் நியாய விலைக்கடைக்கு சென்று தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். விடுபட்ட மின்னணு குடும்ப அட்டைகளுக்கு 13.01.2021 அன்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
மேலும் பொங்கல் பரிசு வழங்கும் பணி சீராக நடைபெறுவதை கண்காணித்திட, வட்ட அளவில் துணை ஆட்சியர்கள் கண்காணிப்பு அலுவலர்களாகவும், நடமாடும் கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகை விநியோகம் குறித்த புகார்கள்ஃகுறைகள் ஏதுமிருப்பின் பொதுமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண். 0461-2341471-ல் புகார் அளிக்கலாம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக