சிறப்பாக பணியாற்றிய பெண் காவலருக்கு. காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு



தேசிய குற்ற ஆவண காப்பகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் (ஊஊவுNளு) இணையதள பயன்பாடுகள் குறித்து ஆய்வு - தமிழ்நாடு  காவல்துறையில்; சிறப்பாக பணியாற்றியமைக்காக மாநில அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவராக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்; தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.


தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதளம் ஏதுவாக உள்ளது.


 மேற்படி இந்த இணையதள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம் (யேவழையெட ஊசiஅந சுநஉழசனள டீரசநயர) தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்;.


அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவராக தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதல் நிலை பெண் காவலர் திருமதி. ஜோசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட தாளமுத்துநகர் காவல் நிலைய முதல் நிலை பெண்காவலர் திருமதி. ஜோசி அவர்களுக்கு இன்று (17.12.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.  ஜெயக்குமார் அவர்கள் தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வளார் திருமதி. ஜெயந்தி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.                 சிறப்பாக பணியாற்றிய பெண் காவலருக்கு. காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு

கருத்துகள்