முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் எச்சரிக்கை



தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல் இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் வீச உள்ளது என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளதால் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்


-----------------------------------------------------------------------------------------------------------


தூத்துக்குடி மாவட்டத்தில் புரவி புயல்; இன்று மாலை வீச உள்ளது எனவும், இந்த சமயத்தில் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மிக அவசிய தேவையன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் கன மழையின் காரணமாக நீர் நிலைகளில் அதிக வெள்ளம் செல்ல வாய்ப்புள்ளது எனவே நீர் நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். புயலின் காரணமாக கடல் கொந்தளிப்பு வாய்ப்புள்ளதால் கடற்கரைக்கு அருகில் செல்ல வேண்டாம். கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்று பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும், மின்கம்பங்கள்; மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் எனவும், காற்று பலமாக வீசுவதால் மரங்கள் விழ வாய்ப்புள்ளது எனவே பொதுமக்கள் மரங்களுக்கு கீழ் எக்காரணம் கொண்டும் ஒதுங்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் கிராமப்புற பகுதியில் அமைக்கபட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களுக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடைமைகளை பத்திரப்படுத்திக்கொள்ளுமாறும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கால்நடைகள் வளர்போர் தங்களது கால்நடைகளை பாதிப்பு ஏற்படாத பகுதிக்கு கொண்டு செல்லுமாறும், மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் டார்ச்லைட், மெழுவத்தி, தீப்பெட்டி போன்றவைகளை இருப்பில் வைத்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


இன்று (03.12.2020) மாலை  6 மணி முதல் பொதுமக்கள் மிக முக்கிய காரணம் எதுவுமின்றி வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் எனவும், வாகனங்களில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதிகாரப்பூர்வ மற்றும் நம்பதகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை மட்டும் பார்க்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் அவசரகால கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 0461 2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 9486454714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புயல் பாதிப்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்து உதவுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்