முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு


தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு

------------------------------------------------------------------------------------------------

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ராபி பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான மிளகாய் 30 குறுவட்டங்களிலும், கொத்தமல்லி 11 குறுவட்டங்களிலும்,  வெங்காயம் 21 குறுவட்டங்களிலும், வாழைப் பயிர் 27 குறுவட்டங்களிலும், வெண்டை 1 குறுவட்டத்திலும் பயிர் காப்பீடு செய்து பயன் அடைய நடப்பாண்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்பாராத இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காக்க புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டம் 2020 - 2021-ன்கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யலாம்.

விண்ணப்படிவம், உறுதி மொழிபடிவம், கிராம நிர்வாக அலுவலரிமிருந்து பெறப்பட்ட 10-1 அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க ஒளி நகல், ஆதார் அட்டை ஒளி நகல் ஆகிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

மிளகாய் பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.1இ089ஃ-ம், வாழை பயிருக்கு 01.03.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.3இ115ஃ-ம், கொத்தமல்லி பயிருக்கு 30.01.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.400ஃ-ம், வெங்காயம் பயிருக்கு 15.02.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.945ஃ-ம், வெண்டை பயிருக்கு 15.02.2021ம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு தொகை ரூ.798ஃ-ம் செலுத்தி காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம்.

இயற்கை இடர்பாடுகள் நிகழுமானால் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக பயிர்காப்பீடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர்               டாக்டர் கி. செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்