முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகள் தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.

     



தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும்  போக்குவரத்து போலீசாருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார். 


தூத்துக்குடியில் அடாது மழையிலும் விடாது பணி செய்யும் போக்குவரத்து காவல்துறையினரின் சேவையை பாராட்டியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தூத்துக்குடி ரோட்டரி கிளப் சங்கம் சார்பாக போக்குவரத்து காவல்துறையினருக்கு மழை நீர் புகா உடைகளை (சுயin ஊழயவ) வழங்கியுள்ளனர். 


மேற்படி உடைகளை இன்று (02.12.2020) காலை வி.வி.டி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்  போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேஷ் உட்பட 60 போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார். 


இந்நிகழ்ச்சியை முத்துநகர் ரோட்டரி கிளப் (சுழவயசல ஊடரடி ழக pநயசடஉவைல) தலைவர் திரு. ஜூடு ஆரோக்கிய அன்டனி, செயலாளர் திரு.மகாலிங்கம், முத்துநகர் ரோட்டரி கிளப் (Pநயசடஉவைல ஊடரடி) உதவி ஆளுநர் திரு. பாலமுருகன், முன்னாள் தலைவர்கள் திரு. பாலாஜி, திரு.பொதிகை கண்ணன், திரு. சிவராமகிருஷ்ணன், திரு. விஜயன், உதவி தலைவர்கள் திரு. லயன்ஸ் ராஜா, உறுப்பினர்கள் செந்தில் ஆறுமுகம்,  திரு. மகராஜன், திரு. முத்துராமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.    


இந்நிகழ்வின்போது பொதுமக்கள், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் திரு. மயிலேறும்பெருமாள் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...