சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) மாறுதல் செய்ய வாய்ப்பு
07.12.2020
சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) மாறுதல் செய்ய வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) 20.12.2020-க்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் -மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொது விநியோகத்திட்டத்தில் நடைமுறையில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக வகைமாற்றம் செய்திட ஏதுவாக வாய்ப்புகள் வழங்கி தமிழக அரசு பின்வருமாறு ஆணை பிறப்பித்துள்ளது.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போர் அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்வதற்கு தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து 05.12.2020 முதல் 20.12.2020 வரை றறற.வnpனள.பழஎ.in என்ற இணையதளம் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சர்க்கரை குடும்ப அட்டை பயனாளிகள் விருப்பம் இருப்பின் அரிசி குடும்ப அட்டைகளாக (NPHH - Rice) 20.12.2020-க்குள் மாறுதல் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக