காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021ம் ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வீரமாமுனிவர் விiயாட்டு மைதானத்தில் (25.12.2020) அன்று காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு போட்டி, கொரோனா விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பந்தை கிரிக்கெட் மட்டையால் அடித்து துவக்கி வைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது,
அமைதியான காமநாயக்கன்பட்டி ஊர் சார்பாக இளைஞர்பெருமக்கள் கொரோனா விழிப்புணர்வு போட்டியாக இந்த கிரிக்கெட் போட்டி நடத்துவது பாராட்டுக்குறியது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த வந்துள்ள நிலையில் தற்போது புதுவிதமாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் அவற்றை எதிர்கொள்ள சிறந்த தடுப்பூசியாக கருதப்படுவது முகக்கவசம் அணிவதுதான். எனவே நாம் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை நல்ல நிலையில் முன்னேற்ற சிறந்த புத்தகங்களை படித்து தவறான பழக்க வழக்கங்குளுக்கு அடிமையாகாமல் ஒழுக்கத்தோடு நற்பண்புகளை வளர்த்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறினார்.
இந்த விழாவில் காமநாயக்கன்பட்டி பங்குதந்தை திரு. அந்தோணி அ.குருஸ், உதவி பங்குதந்தை திரு. லூர்து மரிய சுதன், வீரமாமுனிவர் கிரிக்கெட் கிளப் தலைவர் திரு. ஜான் பீட்டர் பால், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜயப்பன், கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்வேல் முருகன், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. காந்தி, கொப்பம்பட்டி காவல் நிலைய கிரிக்கெட் விளையாட்டு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக