முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்




காமநாயக்கன்பட்டியில் புனித பரwலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021 ஆண்டுக்கான 23வது ஆண்டு கிரிக்கெட் போட்டி : மாவட்ட காவல கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.   





தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா விண்ணேற்பு கோப்பை 2020-2021ம் ஆண்டுக்கான 23வது ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி வீரமாமுனிவர் விiயாட்டு மைதானத்தில்  (25.12.2020)  அன்று காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு போட்டி, கொரோனா விழிப்புணர்வு போட்டியாக நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் பந்தை கிரிக்கெட் மட்டையால் அடித்து துவக்கி வைத்தார். 

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசும்போது,

அமைதியான காமநாயக்கன்பட்டி ஊர் சார்பாக இளைஞர்பெருமக்கள் கொரோனா விழிப்புணர்வு போட்டியாக இந்த கிரிக்கெட் போட்டி நடத்துவது பாராட்டுக்குறியது. மேலும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த வந்துள்ள நிலையில் தற்போது புதுவிதமாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் வந்துள்ள சூழ்நிலையில் அவற்றை எதிர்கொள்ள சிறந்த தடுப்பூசியாக கருதப்படுவது முகக்கவசம் அணிவதுதான். எனவே நாம் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை நல்ல நிலையில் முன்னேற்ற சிறந்த புத்தகங்களை படித்து தவறான பழக்க வழக்கங்குளுக்கு அடிமையாகாமல் ஒழுக்கத்தோடு நற்பண்புகளை வளர்த்து சமுதாயத்தில் சிறந்தவர்களாக திகழவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கூறினார். 


இந்த விழாவில் காமநாயக்கன்பட்டி பங்குதந்தை திரு. அந்தோணி அ.குருஸ், உதவி பங்குதந்தை திரு. லூர்து மரிய சுதன், வீரமாமுனிவர் கிரிக்கெட் கிளப் தலைவர் திரு. ஜான் பீட்டர் பால், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜயப்பன், கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்வேல் முருகன், பயிற்சி உதவி ஆய்வாளர் திரு. காந்தி, கொப்பம்பட்டி காவல் நிலைய கிரிக்கெட் விளையாட்டு காவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.   

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்