தூத்துக்குடியில் நடை பெற்ற குருப் 1. தேர்வு ; ஆட்சியர் ஆய்வு


 

                                                                                                                                                          தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர் (18), துணை காவல் கண்காணிப்பாளர் (19), வணிக வரித்துறை உதவி ஆணையர்(10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) என குரூப்-1 பதவியில் அடங்கிய 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது   இதைத்தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்தனர்                                                                                                                                                                                                                                                                      இந்த 66 காலிபணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலை தேர்வு நேற்று 3-1- 2021 காலை நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் 856 மையங்களில் 2.57 லட்சம் பேர் எழுதினர். தூத்துக்குடியில் குட் ஷெப்பர்டு பள்ளியில் தேர்வு நடை பெற்றது     தேர்வு  நடைபெறும் வகுப்பு அறையில்   தேர்வு  நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். 


கருத்துகள்