அதிமுக வை புறக்கணிப்போம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் " திருமதி கீதா ஜீவன் " பேச்சு
தூத்துக்குடி 14வது வார்டு திமுக சார்பில் மக்கள் சபை கூட்டம் 6 - 1 - 2021 புதன்கிழமை அன்று மாலை 7 மணி அளவில் 14 வது வட்ட திமுக செயலாளர் திரு. அந்தோணி லாசர் தலைமையில் , 14 வட்ட திமுக தலைவர் SP. ஆறுமுகம் அவர்கள் முன்னிலையில் பிள்ளையார் கோவில் முன்பாக நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர மற்றும் தூத்துக்குடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் திருமதி கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அதில் . தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அதிமுக வின் பொறுப்பற்ற போக்குகளை சுட்டி காட்டி - மக்களுக்கு தேவையான ஆக்க பூர்வமான பணிகளை புறம்பாக தள்ளி வைத்து விட்டு , பதவியை தக்க வைத்துக் கொள்ள தேவைபடும் காரியங்களை நடத்தி கொண்டு இருக்கிறது : ஆகவே வரும் தேர்தலில் அதிமுக வை புறக்கணிப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த கூட்டத்தில் மக்களிடத்தில் உரை நிகழ்த்தினார்
இந்த கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் , வட்டச் செயலாளர் திரு சிங்கராஜ் , மாநில பேச்சாளர் சரத் பாலா , சண்முகபுரம் பகுதி செயலாளர் சுரேஷ்குமார் , தோழமைக் கட்சி சிபிஎம் சார்ந்த தோழர் PM அழகுபாண்டியன் , சி பி ஐ, தோழர் எஸ் பி ஞானசேகரன் ,
14 ஆவது வட்ட பிரதிநிதி கே. அல்போன்ஸ் , மைதீன்கான், எஸ் மலையரசன் , துணைச் செயலாளர் இசக்கிமுத்து , ஈனம்மாள், சங்கரலிங்கம் , நடராஜன்
இளைஞரணி செயலாளர் : இசக்கி சுப்பிரமணியன், துணைச் செயலாளர் கே செல்வின் கோவில்ராஜ் - இளைஞர் அணியினர் பிரதீப், முருகன், இசக்கிராஜா , ராஜ்,
இன முத்து , விஜய் , ரகு , மாரிமுத்து , நம்பி , ஜி தங்கசாமி செண்பகராஜ் , பி முத்துராஜ் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக