முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு .

 

ஆறுமுகநேரியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு .

.  

    


(08.01.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்; ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து தொடங்கி ஆறுமுகநேரி பஜார், காயல்பட்டினம் இரயில்வேல்கேட் பாதை வழியாக பேயன்விளை சென்று நிறைவடைந்தது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறியதாவது இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில்  இன்று காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை அடையாள அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடைபெற்றது. இதே போன்று திருச்செந்தூர், உடன்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். 

இந்த அணிவகுப்பில் திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் இ.கா.ப, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சஞ்சீவ் குமார், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. கண்ணன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி, குலசை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ராதிகா, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. ஜாகீர் உசேன், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் நிலைய காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள்;, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர்கள் உட்பட 300 காவல்துறையினர் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...