முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

  கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்





32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

 

இந்த மாதம் 18.01.2021 முதல் 17.02.2021 வரை 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சாலை பாதுகாப்பு மாதத்தில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தி சாலை விபத்துக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி கடந்த 18.01.2021 முதல் தினம் தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 



இன்று தூத்துக்குடி காவல்துறை போக்குவரத்து பிரிவு மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு. சங்கர் அவர்கள் தலைமையிலான சஹா கிராமியக் குழுவினர்  பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திலிருந்து குரூஸ்பர்னாந்து சிலை வரை நடத்திச் சென்று அங்கும் ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தி நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் வாகன ஓட்டிகளுக்கு சாலைபாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்;. 



இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி போக்குவரத்துப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. விநாயகம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. நெடுஞ்செழிபாண்டியன் மற்றும் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. நாகூர்கனி ஆகியோர் செய்திருந்தனர். 


இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வளார் திரு. ஜெயப்பிரகாஷ், உதவி ஆய்வாளர்கள் திரு. ரவிக்குமார், வேல்ராஜ், திரு. வெங்கடேசன் உட்பட காவல்துறை அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர்கலந்து கொண்டனர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்