முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.

      



தூத்துக்குடிமாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில்  (08.01.2021)  அன்று நடைபெற்ற இந்த கிராம விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசுகையில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்;தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் அனைத்து கிராமங்களுக்கும் கிராம விழிப்புணர்வு காவல்துறை அதிகாரியாக ஒவ்வொரு காவலர்களை நியமித்துள்ளோம். அதன்படி இந்த ஆழ்வார்கற்குளம் கிராமத்திற்கு காவலர் திரு. நாகராஜ் என்பவரை நியமித்துள்ளோம்.  அவர் கிராமத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளருக்கு தெரியப்படுத்தி அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்.   அதே போன்று உங்கள் பகுதிக்கு பஸ் வரவேண்டும் என்று கூறியிருந்தீர்கள் பஸ் ரூட் 16 சி வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.                                                                                                                                                                       அதே போன்று ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு கடைசி வரை பஸ் வரவேண்டும் என்று கூறியிருந்தீர்கள், அதற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து ஏற்பாடு செய்யப்படும். உங்கள பகுதியில் உள்ள பிரச்சனைகளை காவல்துறைக்கு தெரிவித்தால் அவற்றை தீர்த்து வைப்பதற்கு காவல்துறை தயாராக உள்ளது. ஸ்ரீவைகுண்டம், கருங்குளம் போன்ற கிராமங்களில் இதுபோன்ற கூட்டம் நடத்தப்பட்டபோது, வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்று கூறியிருந்தோம். அதன்படி ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு படித்த இளைஞர்கள் வேலை வாங்கித்தர வேண்டும் என்று கூறியிருந்தார், அவருக்கு தூத்துக்குடி அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கிக்கொடுத்துள்ளோம். அதே போன்று உங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வேண்டும் என்றால், அருகில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதற்கு ஏற்பாடு செய்வோம்.                                                                                                                                                              காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஒரு இணக்கமான நல்ல சூழல் உருவாக வேண்டும். காவல்துறை உங்களுக்காக எப்போதும் உழைக்கத் தயாராக உள்ளோம் என்ற பல்வேறு நல்ல கருத்துக்களை கூறி தனது உரையை நிறைவு செய்தார். 

இக்கூட்டத்தில் ஆழ்வார்கற்குளம் ஊர்த்தலைவர் திரு. முருகன், பஞ்சாயத்து தலைவர் திருமதி. முத்துக்குமாரி, காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், காவல் ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன், உதவி ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்