மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டி : முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற காவலர் : தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு
மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ் ஜெயக்குமார் அவர்கள் இன்று பாராட்டினார்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான யோகாசன போட்டி கடந்த 24.11.2020 அன்று ஆன்லைனில் (ழுடெiநெ) நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 90 ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த யோகாசன போட்டியில் 35 முதல் 45 வயது பிரிவில் நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை முதல்நிலைக் காவலர் திரு. ராஜலிங்கம் என்பவர் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மாநில அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் திரு. ராஜலிங்கம் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக