திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பாதசாரிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்கள் வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கை.
.
தூத்;துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் பாதாயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு இன்று (08.01.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் ஒளிரும் தன்மையுடைய ஸ்டிக்கர்கள் (சுநகடநஉவiபெ ளுவiஉமநச) பாதாசாரிகளின் கை மணிக்கட்டு பகுதி, சட்டையின் முதுகு பகுதி மற்றும் பாதசாரிகளின் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஒட்டிகள் ஒட்டிகளை ஒட்டினார்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாதசாரிகளிடம் பேசும் போது பாதnசாரிகள் . சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளை மதித்து பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இந்நிகழவின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. ராஜ சுந்தர் உள்ளிட்ட காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக