பனியின்போது வீர மரணம் அடைந்த ஏரல், காவல் நிலைய உதவி ஆய்வாளர் வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்
தூத்துக்குடி ஏரல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் கடந்த 01.02.2021 அன்று கொலை செய்யப்பட்டு வீர மரணமடைந்தார்.
அவரது சொந்த ஊரான முடிவைத்தானேந்தலில் உள்ள அவரது வீட்டிற்கு மதுரை தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் இன்று (04.02.2021) நேரில் சென்று பாலு அவர்களின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின் அவரது மனைவி திருமதி. பேச்சியம்மாள், மகன் திரு. அருண் வேலாயுதம், மகள் ஜெயதுர்க்கை வேணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஞானராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக