முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட தேர்தல் அலுவலர். ஆலோசனை கூட்டம்

 


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.02.2021) நடைபெற்றது.  

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  - மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குசாவடிகளும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்123 வாக்குசாவடிகளும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 56 வாக்குசாவடிகளும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 92 வாக்குசாவடிகளும்,  கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 93 வாக்குசாவடிகளும் என மொத்தம் 494 வாக்குசாவடிகள் 1050 வாக்காளர்களுக்கு மேல் வாக்குசாவடிகள் இங்கு  ஏ, பி என துணை வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.  வாக்குசாவடிகளில் வீட்டு கதவு எண் இலக்கத்தின்படி வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு துணை வாக்குசாவடிக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும். இதில் வாக்காளர் பதிவு அலுவலர் ஃ உதவி வாக்காளர் பதிவு அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனையின்படி இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதன்மை வாக்குசாவடிகள் 1603, துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்பட்டவுடன் மொத்த வாக்குசாவடிகள் 2097ஆக அதிகரிக்கும். 

துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்படும்போது 23 வாக்குசாவடிகள் இடமாற்றமும், 26 வாக்குசாவடிகள் கட்டிட மாற்றமும், 7 வாக்குசாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தற்போது அமைக்கப்பட உள்ள 494 துணை வாக்குசாவடிகளில் 476 துணை வாக்குசாவடிகள் ஏற்கனவே உள்ள முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள அதே பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. 18 துணை வாக்குசாவடிகள் முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள வளாகத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் மாற்று இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தாங்கள் தெரிவித்துள்ளவாறு மாற்றங்கள் செய்யப்பட்டு இன்னும் 2 தினங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும் விவரங்கள் தங்களுக்கு  வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தங்களது ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என பேசினார்.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.சரண்யாஅரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், கோட்டாட்சியர்கள் திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), அரசியல் கட்சி பிரமுகர்கள் திருமதி.கீதாஜீவன், எம்.எல்.ஏ. (தி.மு.க.), திரு.சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), திரு.எம்.எஸ்.முத்து(சி.பி.எம்.), திரு.அசோக்குமார்(பி.எஸ்.பி.), திரு.பாலசிங் (காங்கிரஸ்), திரு.ராமகிருஷ்ணன்(தே.மு.தி.க.) மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்கள், துணை வாக்குப்பதிவு அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்