அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட தேர்தல் அலுவலர். ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2021 தூத்துக்குடி மாவட்டத்தில் துணை வாக்குசாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.02.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் - மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 53 வாக்குசாவடிகளும், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்123 வாக்குசாவடிகளும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 77 வாக்குசாவடிகளும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 56 வாக்குசாவடிகளும், ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 92 வாக்குசாவடிகளும், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 93 வாக்குசாவடிகளும் என மொத்தம் 494 வாக்குசாவடிகள் 1050 வாக்காளர்களுக்கு மேல் வாக்குசாவடிகள் இங்கு ஏ, பி என துணை வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது. வாக்குசாவடிகளில் வீட்டு கதவு எண் இலக்கத்தின்படி வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு துணை வாக்குசாவடிக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும். இதில் வாக்காளர் பதிவு அலுவலர் ஃ உதவி வாக்காளர் பதிவு அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனையின்படி இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதன்மை வாக்குசாவடிகள் 1603, துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்பட்டவுடன் மொத்த வாக்குசாவடிகள் 2097ஆக அதிகரிக்கும்.
துணை வாக்குசாவடிகள் 494 அமைக்கப்படும்போது 23 வாக்குசாவடிகள் இடமாற்றமும், 26 வாக்குசாவடிகள் கட்டிட மாற்றமும், 7 வாக்குசாவடிகள் பெயர் மாற்றமும் செய்யப்பட பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தற்போது அமைக்கப்பட உள்ள 494 துணை வாக்குசாவடிகளில் 476 துணை வாக்குசாவடிகள் ஏற்கனவே உள்ள முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள அதே பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. 18 துணை வாக்குசாவடிகள் முதன்மை வாக்குசாவடிகள் அமைந்துள்ள வளாகத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் மாற்று இடத்தில் அமைக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் தாங்கள் தெரிவித்துள்ளவாறு மாற்றங்கள் செய்யப்பட்டு இன்னும் 2 தினங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வாக்குசாவடிகள் அமைக்கப்படும் விவரங்கள் தங்களுக்கு வழங்கப்படும். இதுகுறித்து மேலும் தங்களது ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என பேசினார்.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் திருமதி.சரண்யாஅரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணபிரான், கோட்டாட்சியர்கள் திரு.சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி.தனப்ரியா(திருச்செந்தூர்), அரசியல் கட்சி பிரமுகர்கள் திருமதி.கீதாஜீவன், எம்.எல்.ஏ. (தி.மு.க.), திரு.சந்தானம் (அ.இ.அ.தி.மு.க.), திரு.எம்.எஸ்.முத்து(சி.பி.எம்.), திரு.அசோக்குமார்(பி.எஸ்.பி.), திரு.பாலசிங் (காங்கிரஸ்), திரு.ராமகிருஷ்ணன்(தே.மு.தி.க.) மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு அலுவலர்கள், துணை வாக்குப்பதிவு அலுவலர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக